திருச்சி மாவட்டம் திருவரங்கம் வட்டம் சிறுகமணி கிராமம் அருள்மிகு பிடாரி அரசாயி அம்மன் திருக்கோயில் பிடாரி தலங்களில் சிறப்பு வாய்ந்ததாகும் இத்திருக்கோயிலில் மலையாளி சுவாமிக்கு பூ கூடாரம் செய்வது பலருடைய வேண்டுதல் ஆகும் தாம் வேண்டும் வரம் குறித்து சீட்டு எழுதி மலையாளி சுவாமி சன்னதியில் கட்டிவைத்து நிறைவேறியபின் இதுபோன்ற வேண்டுதல் பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது வேண்டும் வரம் வழங்கும் சக்தி படைத்தவன் மலையாளி முற்காலத்தில் பில்லி சூனியம் தெரிந்த மந்திரவாதிகள் நிறைய பேர் இருந்தார்களாம் அவர்கள் தங்கள் மந்திர சக்தியால் பிடாரி அம்மனை ஏவல் வேலை வயல்களில் தண்ணீர் பாய்ச்சுவது நடவு நடுவது போன்ற வேலைகளைச் செய்யும்படி செய்து வந்தார்களாம் அந்த சமயத்தில் மலையாளத்திலிருந்து மலையாள கருப்பு என்ற சாமி அங்கு...