இத்திருக்கோயிலில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை 20.01.1988 முதல் பொறுப்பேற்று நிர்வாகம் நடைபெற்று வருகின்றது இதற்கு மூன்றாம் நிலை செயல் அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இத்திருக்கோயிலில் தமிழக அரசின் ஆணைக்கிணங்க திருக்கோயிலுக்கு வரும் சேவார்த்திகளுக்கு மதிய அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திருக்கோயிலில் சக்கரத்தாழ்வார், நரசிம்மர் மற்றும் பாண்டுரெங்கர் தனி சன்னதி உள்ளது. சக்கரத்தாழ்வாருக்கு பிரதி மாதம் தோறும் சித்திரை நட்சத்திரம் அன்று சுதர்சன வேள்வி நடைபெறுகிறது,