அருள்மிகு அபிராமி உடனுறை அமிர்தக்கடேஸ்வரர் திருக்கோயில் திருச்சி , சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இடபுறம் அமைந்துள்ள நெருஞ்சிக்கோரை கிராமத்தில் கிழக்கு திசை நோக்கி அமர்ந்துள்ள பிரசித்தி பெற்ற திருக்கோயிலாகும். தேவர்கள் பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தபோது தோன்றிய ஆலகால விஷத்தை சிவன்பெருமான் அருந்தி தேவர்களை காத்து அருள்பாவித்தார் என்று சிவபுரான செய்திகள் கூறுகின்றன. அவ்வாறு தோன்றிய அமிர்தத்தை ஒரு குடத்தில் வைத்து அவர் தேவர்களுக்கும், மூவர்களுக்கும் விநியோகித்த நிகழ்ச்சியோடு தொடர்புடைய தலமாக இவ்வூர் விளங்கியது என்று ஆன்றோர்கள் கூறுகின்றனர். அதேபோல பிரளயகாலத்தில் எல்லா உயிர்களையும் காப்பாற்றுவதற்கு...