அருள்மிகு பாண்டிமுனிஸ்வரர் திருக்கோவில் 18ம் நூற்றாண்டை சேர்ந்தது.இதற்கு இரண்டு உப கோவில்கள் ஆண்டிசாமி மற்றும் சமையன்சாமி சன்னதிகள் உள்ளன.இது ஒரு பிராத்தனை ஸ்தலம் ஆகும்.இத்திருக்கோவிலுக்கு வெள்ளிகிழமை,செவ்வாய்கிழமை மற்றும் விஷேச நாட்களில் பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிகின்றனர்,அவ்வாறு வரும் பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டுவதும்,தங்களின் குழந்தைகளுக்கு பாண்டி என்று பெயர் சூட்டுவதும்,பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடன் நிறைவேறியதும் முடிக்காணிக்கை செலுத்துவதும்,கிடாய் வெட்டி அன்னதானம் செலுத்துவதுமாக உள்ளனர்.அருள்மிகு பாண்டிமுனிஸ்வரர் தென் மாவட்ட மக்களின் காவல் தெய்வமாக உள்ளார்.