மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து மேற்கே 21 கி.மீ தூரத்தில் வற்றாத புண்ணிய நதியாம் வைகையின் வடகரையில் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து சென்னை செல்லும் புகைவண்டி வழித்தடத்தில் இவ்வூர் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் பிரதான நுழைவு வாயில் கிழக்குமுகமாக உள்ளது. ஜெனக நாராயணப்பெருமாள் ஸ்ரீ தேவி, பூ தேவி சமேதரராய் நின்ற கோலத்தில் அருள்பாளிக்கின்றார். தாயார் சன்னதியும், ஆண்டாள் சன்னதியும், கெருடாழ்வார் சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசியன்று எம்பெருமான் காட்சிதர சொர்க்க வாசலும் உள்ளது. புதிதாகப் பள்ளியறையும் அமைக்கப்பட்டுளளது.