அருள்மிகு கோபிநாதஸ்வாமி திருக்கோவில் திண்டுக்கல் மேற்கு வட்டம் திண்டுக்கல் மாவட்டம் பழநி நெடுச்சாலையில் ரெட்டியார்ச்சத்திரத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இத்திருக்கோயில் மலைக்கோவிலாகும் . இம்மலைஅடிவாரத்தில் மாங்கரை என்னும் ஆறும் அமைந்துள்ளது . இத் திருக்கோயில் தரை மட்டத்தில் இருந்து 450 அடி உயரம் கொண்டது . 619 படிகள் கொண்டது .இம்மலைபடிக்கட்டுகளை பார்க்கும் போது ஆதி சேஷன் மலையில் ஏறுவது போல் காட்சியளிக்கும் .இம்மலையை சுற்றி மூலிகைகள் காணப்படுகின்றது . இத் திருக்கோவில் தரிசனம் செய்து திரும்பும் போது மனதில் ஒருவகை இதமான மனஅமைதி ...
| 08:00 AM IST - IST | |
| IST - 05:00 PM IST | |
| இத்திருக்கோயிலில் காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை திருக்கோயில் நடை திறந்தே இருக்கும் .இடையில் நடை சாத்தப்படுவது கிடையாது. புரட்டாசி சனிக்கிழமைகளில் காலை 05.00 மணி முதல் மாலை 06.00 வரை நடை திறந்து இருக்கும்.மார்கழி (தனூர் மாத பூஜையில்) நான்கு கால பூஜை நடைபெறும்.காலை 05.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடை திறந்து இருக்கும் | |