ஒருகாலத்தில் பாண்டியர்களின் தலைநகராக விளங்கிய மதுரையிலிருந்து மேற்கே 25 கி.மீ. தூரத்தில் வைகை ஆற்றின் தெற்கு கரையோரத்தில் தென்கரை கிராமம் அமைந்துள்ளது. பாண்டியர் கால கல்வெட்டுகளில் தென்கரை கிராமத்தினை பராக்கிம பாண்டியபுரம் என்று குறிப்பிடப்பட்டுள்து. சோழவந்தான் வடக்கு கரையில் அமைந்துள்ளது. தென்கரை கிராமம் வளமான நிலங்கள் மற்றும் தென்னந்தோப்புகளால் சூழப்பட்டுள்ளது. அருள்மிகு மூலநாதசுவாமி கோவிலில் காணப்படும் கல்வெட்டுகள் இந்த கிராமத்தின் செழுமை, செழிப்பு மற்றும் கலாச்சார மதிப்பு ஆகியவற்றை விரிவாக விவரிக்கின்றன. இந்த கிராமம் கோயிலை மையமாகக் கொண்டு ஸ்வஸ்திகா வடிவத்தில் அமைந்துள்ளது. வைணவம் பிரதானமாக இருந்தபோது, இந்த கிராமத்திற்கு குலசேகரபுரம் என்று பெயரிடப்பட்டது. நாயக்கர்களின் ஆட்சிக் காலத்தில் வைகை ஆற்றின் தெற்குப் பகுதியில் இக்கிராமம் அமைந்திருந்ததால் அதற்கு தென்கரை என்று...