இத்திருக்கோயில் தேனி மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் தேனி குமுளி நெடுஞ்சாலையில் கிழக்கு பக்கம் அமையப்பட்டுள்ளது. இத்திருக்கோயில் தமிழ்நாட்டில் உள்ள அம்மன் திருக்கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோயிலாகும். திருக்கோயிலில் சித்திரை திருவிழா தமிழ் ஆண்டு சித்திரை மாதம் முதல் செவ்வாய்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 22வது நாளிலிருந்து தொடங்கி எட்டு நாட்கள் முக்கிய திருவிழா நடைபெறும்.இந்த எட்டு நாட்கள் திருக்கோயில் நடை தொடர்ந்து திறந்து இருப்பது மிகவும் விசேசமான ஒன்றாகும்.