ஸ்தல வரலாறு நீர் வளம், நில வளம் நிறைந்த உத்தமபாளையம் தென்காளஹஸ்தி என்றும் குறிப்பிடப்படுகின்றது.இவ்வூர் முன்பு காட்டூர் என அழைக்கப்படுகிறது. சங்ககாலம் தொட்டு உத்தமபளையம் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.கி.பி.10 -ம் நூற்றாண்டில் பிற்காலச் சோழ மன்னர்கள் பாண்டிய நாட்டைக் கைப்பற்றிய போது இவ்வூரும் சோழநாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த உண்மையை அருகிலுள்ள சின்னமனூர் கல்வெட்டுக்கள் புலப்படுத்துகின்றன.இவ்வூரின் பாளையக்காரராக இருந்த உத்தப்ப கொண்டமநாயக்கரின் பாளையம் என அழைக்கப்பட்டது.பின்பு இவ்வூர் சுருக்கமாக உத்தமபாளையம் என அழைக்கப்பட்டு வருகிறது. ...