தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம், குள்ளப்பபுரம் கிராமத்தில் வராக நதிப்பகுதியில் அருள்மிகு உத்தண்ட சௌந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் தைமாத முதல் நாள் அருள்மிகு உத்தண்ட சௌந்தரராஜப்பெருமாளுக்கு தங்க அங்கி சேவை நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும்.