இராமேசுவரம் தீவில் உள்ள இராமநாதசுவாமி திருக்கோயிலில் இருந்து தெற்கே சுமார் 5 கிலே.மீட்டர் தொலைவில், தனுஸ்கோடி செல்லும் சாலையில், புதுரோடு பகுதியில் இந்தத்திருக்கேயில் அமைந்துள்ளது. தலவரலாறு சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு இராமேசுவரம் தீவில் உள்ள இந்தப் பகுதி, தாழை மரங்கள் நிறைந்த வனமாக விளங்கியது. ஒரு சமயம், விறகு வெட்டுபவர் இங்குள்ள தாழை மரமங்களை வெட்டும்போது ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டு வந்தது. உடனே அவர் பயந்து போய் ஊர்மக்களை அழைத்து வந்தார். அப்போது ஒருவருக்கு அருள் வந்தது. அவர் இந்தப் பகுதியில் நான் தாழைவன அம்மனாக பூமியில் மறைந்துள்ளேன். என்னை வெளியில் எடுத்து கோவில் அமைத்து வழிபடுங்கள். நான் உங்களைக் காத்தருள்வேன். என்னை நம்புங்கள் என்றார். அதன்படியே அப்பகுதி மக்கள், அன்னையைப் பூமியில் இருந்து தோண்டி எடுத்தனர்...