சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம்,பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பகவிநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்குவீற்றிருக்கும் விநாயகர் மோன நிலையில் தவம்புரிகிறார். இத்திருக்கோயில் முற்காலத்து பாண்டியர் காலத்து குடவரை திருக்கோயில். இத்திருக்கோயிலில் கற்பகவிநாயகர் இருகரங்களோடும் ஜடாமுடியுடன் காட்சி அளிக்கிறார் . அருள்மிகு கற்பக விநாயகர் மூலஸ்தான குடவரை அர்த்த சக்கரத்தில் அமைந்துள்ளது. உலகிலேயே மூலஸ்தான குடவரை அர்த்த சக்கரத்தில் அமைந்திருப்பது இத்திருக்கோயிலில் மட்டுமே . வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை கற்பக விருட்சம் போல் அள்ளி தருவதால் இவ்விநாயகர் கற்பக விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.