பரமக்குடி ஆயிர வைசிய குல மஞ்சப்புத்தூர் சைவ வைஷ்ணவ செட்டியார்களுக்குப் புராதனப் பாத்தியமான அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு பிரம்பு அடர்ந்த காடாகவும், கடம்ப மரங்கள் நெருங்கி வளர்ந்த வனமாகவும் பரமக்குடி திகழ்ந்தது. இப்பகுதியைப் பாம்பூர் தும்பிச் சங்கை நாயக்கர் என்னும் சிற்றரசர் ஆண்டு வந்தார். அவர் நாள்தோறும் குதிரையில் சென்று மதுரை ஸ்ரீ மீனாட்சி அன்னையையும், ஸ்ரீ சுந்தரேசப் பெருமானையும் வழிபட்டு வருவது வழக்கம். அதன் பின்னரே உணவு கொள்வார். வயதாகி முதுமைப்பருவம் அடைந்த காலத்தில் அவரால் மதுரை செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. அம்மையப்பர் தரிசனமின்றி உணவு கொள்வதை மறுத்தார் அவர். அன்றிரவு அவர் கனவில் ஆலவாய் அண்ணல் தோன்றி வைகைக் கரையின் தென்புறம் கடம்பவனமாகத் திகழும்...