இராமநாதபுரம் சமஸ்தானத்தேவஸ்தானத்திற்குரிய திருக்கோயில் சேதுபதி மகாராஜா குடும்பத்தினரே பரம்பரை அறங்காவலராவர். சேது வளநாட்டின்தலைநகரான ராமநாதபுரத்திற்கு தென்மேற்கில் 15 கி.மீ., தூரத்தில் திருஉத்தரகோசமங்கை தலம் உள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற சிறப்புகளை கொண்ட அருள் தரும் மங்களநாயகிஅம்பாளுடன் அருள் பாலிக்கும்மங்களநாதசுவாமி கோவில் மிகவும் பழமையானதாகவும், தொன்மை யானதாகவும்அமைந்துள்ளது. வேத ஆகமத்தைஉமாதேவிக்கு உபதேசம் செய்த புண்ணியதலம் என்பதால் திருஎனும் தெய்வ அடைமொழியுடன்இத்தலம்திருஉத்தரகோசமங்கை என பெயர் பெற்றது. சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில்ஒன்றாகியவலைவீசிய லீலை நடந்த இடமானபரதவர்கள் நிறைந்த கடற்பகுதி( ஏர்வாடி )திருஉத்தரகோசமங்கைக்கு அருகில் உள்ளது. சிவபெருமான், அம்பிகையை பரதவர் (மீனவர்) மகளாகபிறக்கச் செய்து, பின் அவளுக்கு விமோசனம் கொடுத்து, திருமணம் செய்து, இத்தலத்திலேயே தங்கி வேதப்பொருளை உபதேசம் செய்தார். இத்தலத்தில் இருந்த சிவனடியார்கள், சிவயோகிகள்...