இத் திருக்கோவில் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்து அம்பாள் அருள்மிகு கண்ணுடையநாயகி அம்மன் என்று அழைக்கப்படுகிறாள். இந்த பெயருக்கேற்றாற்போல இத்திருக்கோவில் கண் சம்மந்தமான நோய்களை களையும் ஆற்றல் கொண்டு விளங்குகிறது. இத்திருக்கோவில் அருகிலேயே பாட்டரசன் கம்பனுக்கு சமாதி அமைந்துள்ளது. இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.