ராமாயணக் காலத்தில் சீதையை ராவணன் இலங்கைக்கு கடத்திக் கொண்டு செல்லும் போது இடையில் ஜடாயு பறவை வழிமறித்தது. அப்போது இராவணனின் கதாயுதத்தால் அதன் சிறகுகள் வெட்டப்பட்டது. அவ்வாறு வெட்டுப்பட்ட சிறகுகள் வானிலிருந்து விழுந்த இடம் இத்திருக்கோவில் ஆகும். எனவே இது சிறகிலிநாத சுவாமி திருக்கோவில் என்று அழைக்கப்படும் வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோவிலாகும்.