இத்திருக்கோவில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்புவனத்தில் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இத்திருத்தலம் புகழ்பெற்ற நால்வரால் பாடல் பெற்ற ஸ்தலம் ஆகும். காசிக்கு நிகரான புண்ணிய ஸ்தலமாக மக்களால் வழிபடப்படுகிறது. தனது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்வுகளும் இங்கு நடைபெற்று வருகிறது.