முன் மண்டம் திருச்செந்துாரில் உள்ளது போலவே இங்கு கோவிலுக்குள் தெற்கு வாசலின் வழியாகவே செல்லமுடியும். முதலில் இடது பக்கம் அருள்மிகு சித்தி விநாயகர், கிழக்கு நோக்கி இருந்து அருள் பாலிக்கிறார். அடுத்து வீதி உலா செல்கின்ற உற்சவர்களான விநாயகர், சண்முகர், வள்ளி, தெய்வானை ஆகியோர் உள்ள சன்னிதி அமைந்துள்ளது மணி மண்டம் இம்மண்டபத்திலிருந்து தான் பக்தர்கள் முருகப் பெருமாளை வணங்கமுடியும் இம்மண்டபத்தின் துவக்கத்தில் இடது பக்கம் அனுக்கை விநயகர் வலது பக்கம் கல்லிலான சிவலிங்கம் ஒன்று சுவற்றிலேயே பதிக்கப்பட்டுள்ளது செந்துாரில் மூலஸ்தானம் பின்புறம் வலப்பக்கம் பஞ்சலிங்கம் இருக்கும் அங்கு முருகனுக்கு அருகே இருப்பது போல இங்கும் உள்ளது அடுத்து கீழே, வாசலில் இருபக்கமும் காவலர்கள் வீரபாகு மற்றும்...