அருள்மிகு அரியநாயகி அம்பாள் உடனுறை கைலாசநாதசுவாமி திருக்கோயில் பழமை வாய்ந்த சுமார் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாயக்க மன்னர்கள் காலத்தை சேர்ந்தது. சுவாமி லிங்கவடிவில் தனி சன்னதி கொண்டுள்ளார் அம்பாளுக்கும் தனி சன்னதி உள்ளது. இத்திருக்கோயில் ஆதி நவ கைலாய சந்திர தலமாக கருதப்படுகிறது. திருநெல்வேலி - கடையம் செல்லும் வழியில் அமையப்பெற்ற பிரசித்தி பெற்ற தலமாகும்.கொல்லம் 739 முள்ளிநாடு குலேசரநல்லுாரில் வென்று முடிகொண்ட பாண்டிசுரமுடையநாயனாரை நிலைபொறுத்தினார் திரிபுவனச்சக்கரவர்த்தி கோனேரிமெய் கொண்டான் குலசேகரத்தேவன் என்று கண்டிய்தேவன் என்று இக்கோயில் கல்வெட்டு கூறுகிறது