நாகர்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் பணகுடியிலிருந்து 15 கி.மீ தொலைவிலும் வள்ளியூரிலிருந்து 12 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தாலுகா, களக்காடு ஒன்றியத்தில் திருக்குறுங்குடி கிராமத்தில் அழகியநம்பிராயர் கோவில் அமைந்துள்ளது இந்த ஊர் தெய்வ தலங்கள் அமைந்த இடமாக இருப்பதால், குறுங்குடிக்கு முன்னால் திரு சேர்த்து திருக்குறுங்குடி என்று அழைக்கப்படுகிறது. மாவட்டத்தின் எந்தப்பகுதியில் இருந்தும் திருக்குறுங்குடிக்குப் பேருந்து வசதிகள் உள்ளது அழகிய நம்பிராயர் கோவில். தென்திருப்பதி என்றும், இன்னும் பல சிறப்புகளை உள்ளடக்கியதாகவும் விளங்கும் அழகிய நம்பிராயர் கோவில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முந்தையது ஆகும். மேலும் 108 வைணவத் தலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலம் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும்....