இக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம், முகமண்டபம்,உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் என்னும் அமைப்பை உடையது. கோயிலின் முன் சிறிய தோட்டம் உண்டு. கோயிலைச் சுற்றி மதில் உண்டு. சோழர்காலப் பாணி கட்டுமானம். ரதம் போன்ற தோற்றம். நாகர்கோவில் சோழபுரம் கோயிலைப் போன்ற அமைப்புடையது. விமானம் நாகர அமைப்பு, பிற்காலம் சுதை. இக்கோயில் தமிழகத்தின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியில், ரயில் நிலையம் அருகே உள்ளது. திருக்கோயிலின் முன்பகுதியில் கோயில் பெயர் தாங்கிய பலகை உண்டு. நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி சென்றுஅம்மனைத் தரிசித்து விட்டு இக்கோயிலுக்கு வரலாம். இக்கோயிலைப் பார்த்து விட்டு விவேகானந்தபுரம் செல்லலாம். வாகனங்களைக் கோயிலருகேநிறுத்த முடியும்.