மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருகோயில் விளவன்கோடு வட்டம் குளச்சல் துறைமுகத்திலிருந்து 4 கி.மீ தொலைவிலும் திங்கள் சந்தையிலுருந்து தெற்கே 5 கி.மீ தொலைவிலும் உள்ளது. நாகர்கோவிலிருந்து 20 கி.மீ தொலைவிலும் திருவனந்தபுரத்திலுருந்து 70 கி்மீ தொலைவிலும் உள்ளது. நாகர்கோயில் பேருந்து நிலையத்திலுருந்து பஸ் வசதி உண்டு.இவ்வூதங்கும் விடுதிகள் உள்ளது. அது கடற்கரை கிராமம் கோயிலை ஒட்டிய அடங்களில் சாதாரண வசதியுடள் கூடிய உணவு விடுதி உண்டு.செவ்வாய் கிழமை இக்கோயிலின் விஷேச நாள் கூட்டம் அதிகமிருக்கும்
| 05:00 AM IST - IST | |
| 05:00 AM IST - 08:00 PM IST | |
| 01:00 PM IST - 08:00 PM IST | |
| வார செய்வாய் கிழமைகளில் நடக்கும் பூஜைக்குப் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருகிறார்கள். மாத வழிபாடுகளில் மாத பௌர்ணமி (குறிப்பாக சித்திரை மாத பௌர்ணமி) பங்குனி மாத பரணி ஆவணி மாத அஸ்வதி நட்சத்திர பொங்கல் ஈகியன குறிப்பிடதகுந்தன. ஆடி மாத செவ்வாய் கிழமைகளில் தேவி பல்லக்கில் பவனி வருவாள் கார்த்திகை மாதத்தில் சிறப்பு வழிபாடுகள் இப்போது பெருகி வருகிறது. வில்லிசைக்கலை என்ற கிராமியக் கலைநிகழ்ச்சி பாடுமாறு நேருதல் இக்கோயிலின் சிறப்பு.காணிக்கை கொடுப்பவரின் ஊரிலிருந்து மண்டைக்காடு வரை உள்ள இடங்களைப் பாடுவது இதன் சிறப்பு . முள் முருங்கை முருக்கு போன்ற மரங்களில் செய்யப்பட்ட சாயம் பூசப்பட்ட கைகால் உறுப்புகளை வாங்கி கோயில் தட்டுபந்தலில் எறிவது மற்றொரு நேர்ச்சை | |