பன்னிரு சிவாலயங்களில் நான்காவது கோவில்.மூன்றாவது கோவிலான திற்பரப்பு கோவிலிருந்து கிழக்கு தெற்காக குலேகாரம் சந்திப்பு வழி 8 கி மீ சென்று திருநந்திக்கரை அடையலாம்.நாகர்கோயில் திருவனந்தபுரம் சாலையில் உள்ள மார்த்தாண்டத்திலிருந்து வடகிழக்கே பேச்சிப்பாறை செல்லும் சாலையில் 15 கி மீ தொலைவில் இருப்பது.வெயில் அறியாத ஊர்.நந்தி ஓடையில் கரையில் மரங்கள் அடர்ந்து சோலையில் நடுவே உள்ளது.பக்தி உருவாக சூழலும் குளிர்ந்த பருவமும் வேண்டும் என்பதை இங்கு செல்பவருக்கு புரியும்.திருநந்திக்கரை ஒரு சிறு கிராமம். ஆதலால் மார்த்தாண்டத்திலேருந்து காரில் செல்லலாம்.
| 05:30 AM IST - IST | |
| IST - 08:30 PM IST | |
| காலை 05:30 மணிக்கு திருநடை திறப்பு காலை 06:00 மணிக்கு பூஜை காலை 07:00 மணிக்கு பூஜை காலை 10:00 மணிக்கு பூஜை காலை 11:00 மணிக்கு திருநடை சார்த்துதல் மாலை 05:00 மணிக்கு திருநடை திறப்பு மாலை 06:00 மணிக்கு பூஜை மாலை 07:00 மணிக்கு பூஜை இரவு 08:00 மணிக்கு திருநடை சார்த்துதல் கோவில் திருவிழா மாசிமாத சிவராதிரியில் 10 நாட்கள் நடக்கிறது.சிவராத்திரியின் முந்தய நாள் மாலையில் கொடியேற்றப்படும். கொடிமரம் தற்காலிகமாக நடப்படுவது. பத்து நாட்களிலும் விழாவில் ஸ்ரீபலி,ஆறாட்டு,யானை ஊர்வலம் உண்டு. | |