கோயில் முன்வாசலை அடுத்து இருப்பது கிழக்குப்பிரகாரம். இது மகாமண்டபம் எனவும் படுகிறது. இம்மண்டப வேலை திரு விதாங்கூர் அரசரான ஸ்ரீமூலம் திருநாள் காலத்தில் (1931 -1948) முடிந்தது. இந்த மண்டபத்தில் கொடிமரம் உள்ளது. 40 அடி உயரமுள்ள இக்கொடிமரம் செம்புத்தகடு வேயப்பட்டது. இதன் உச்சியில் தங்கமுலாம் பூசப்பட்ட கருடனின் விக்ரகம் உள்ளது. கோயிலின் பிற பிரகாரங்களில் சுற்றுமண்டபம் உண்டு. இது வெட்டவெளி பிரகாரம், கிழக்கு பிரகாரத்தில் கொடிமரத்தை அடுத்து இருப்பது ஸ்ரீ பலிக்கல். இதன் இருபுறமும் வைணவ அடையாளத்துடன் துவாரபாலகர்கள் உள்ளனர். இவர்களைத் தாண்டியதும் இருப்பது கொலுமண்டபம். முந்தைய காலங்களில் கோயில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இந்த மண்டபக் கட்டுமான அமைப்பின்படி 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம். கொலுமண்டபத்தை அடுத்து இருப்பது அலங்கார மண்டபம். இதன் மேல்விதானம் முட்டை...