பன்னிரு சிவாலயங்களில் முதல் கோவில். நாகர்கோவிலிருந்து மேற்கே திருவனந்தபுரம் செல்லும் சாலையில் இருக்கும் மார்த்தாண்டம் ஊரிலிருந்து தேங்காய்ப்பட்டினம் செல்லும் சாலையில் 8 கி மீ தொலைவில் உள்ளது முஞ்சிறை ஊர். நாகர்கோவிலிருந்து 35 கி மீ தொலைவில் இருப்பது. திருமலை என்று பொதுவாக அழைக்கப்படும். முஞ்சிறை என்ற பேருந்து நிறுத்தத்தில் அரை கி மீ தொலைவில் இக்கோவில் உள்ளது.மார்த்தாண்டத்திலிருந்து முஞ்சிறைக்குப் பேருந்து வசதி உள்ளது
| 05:00 AM IST - IST | |
| IST - 08:30 PM IST | |
| பூஜை காலை 05:00 மணிக்கு திருநடை திறப்பு காலை 05:30 மணிக்கு அபிஷேகம் காலை 06:30 மணிக்கு தீபாராதனை காலை 08:30 மணிக்கு தீபாராதனை பகல் 11:00 மணிக்கு உச்சகால பூஜை ,திருநடை சார்த்துதல் மாலை 05:00 மணிக்கு நடை திறப்பு மாலை 06:30 மணிக்கு சாயரட்சை இரவு 08:00 மணிக்கு அத்தாழ பூஜை, திருநடை சார்த்துதல் விழா இக்கோவிலில் மாசி மாதம் கும்பாஷ்டமி,கார்த்திகை மாதம் விருச்சிகாஷ்டமி,பிரதோஷம் போன்ற விழாக்களும் திருவாதிரை ஆயில்யம் நட்சத்திரங்களில் பூஜைகளும் கிருததாரையும் நடக்கின்றன. பங்குனி புரட்டாசி நட்சத்திரத்தில் மஹாதேவர் கோவிலிலும் கொடியேற்று ஆரம்பித்து பத்து நாட்கள் விழா நடக்கிறது. | |