சானல் கரையில் 3.00 மீட்டர் ஆழமான பரந்து கிடக்கும் ஒன்றரை ஏக்கர் பரப்பளவுடைய தோட்டத்தின் நடுவே கோயில் உள்ளது. பச்சை பசேலென்ற மரங்கள், பட்டப்பகலிலும் இருள் சூழ்ந்த அழகு இதன் நடுவே கிருஷ்ணன் இருக்கின்றார். தரைமட்டத்திலிருந்து 120 செ.மீ உயரம் உடையது. இக்கோயில் கிழக்கு பக்கம் பார்த்த நிலையில் உள்ளது. ஒரே வாசல். கருவறை, அர்த்த மண்டபம், உட்பிரகாரம் என அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்தில் ஐந்து பக்தர்களுக்கு மேல் நிற்க முடியாது. உட்பிரகாரம் பக்தர்களின் பயன்பாட்டில் இல்லை. கேரளப்பாணி வட்ட வடிவ கோயில் ஒடு வேயப்பட்டுள்ளது. உச்சியில் ஒரு கும்பம் உள்ளது. திப்பிறமலை விளவங்கோடு வட்டம் கருங்கல் அருகே உள்ள சிற்றூர். நாகர்கோவிலிருந்து கருங்கல் வழியாக 20 கி.மீ தொலைவில் உள்ளது. கோயில் இருக்கும்...