மூலவா் - அருள்மிகு நாராயணசுவாமி உபசன்னதி - அருள்மிகு உண்ணாசுவாமி அமைவிடம் - அம்பாசமுத்திரம் முதல் பாபநாசம் ரோடில் அடையக்கருங்குளம் பஞ்சாயத்து பேருந்து நிலையத்திலிருந்து சுமாா் 500 மீ தொலைவில் ஊருக்கு மத்தியில் அருள்மிகு நாராயணசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இவ்வூா் ஆரம்ப காலத்தில் ஊா்காடு ஜமீன் நி்ரவாகத்தில் இருந்ததால் ஊா்காடு பட்டி என்றும், பொதுஉடைமை பட்டி என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளளது. இவ்வூரை உண்ணாசுவாமி என்ற சித்தா் ஊா்காடு ஜமீனிடமிருந்து பெற்று இவ்வூா் மக்களுக்கு வழங்கி இவ்வூாிலேயே ஜீவசமாதியாக அடக்கமானதால் இவ்வூா் அடையக்கருங்குளம் என பெயா் பெற்றதாக கருதப்படுகிறது. இத்திருக்கோயிலில் உண்ணாசுவாமி சன்னதி அமையப்பெற்றுள்ளது. உண்ணாசுவாமி என்பவா் உணவு உண்ணாமல் மூலிகைசாாினை மட்டும் உண்டு உயிா் வாழ்ந்து இப்பகுதி...