அருள்மிகு பூமிநாதசுவாமி மற்றும் அருள்தரும் மரகதாம்பிகை அருள்பாலித்து வரும் இத்திருத்தலம் வீரவநல்லூர் ஆகும். இத்திருத்தலம் பூமி (நிலம்)சொத்து தொடர்பான விடயங்களில் பூர்ண நிவர்த்தி தரும் திருத்தலமாகும். தனக்கென சொந்த நிலம் இல்லாதவர்கள் இத்திருத்தல நாயகனை வழிபட்டால் அவர்களுக்கென சொந்த நிலம் கிடைக்கச்செய்வார் மற்றும் பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளை நிவர்த்தி செய்து அருள்பவர் ஆவார். இத்திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் மற்றும் மார்கழி திருவாதிரை திருவிழா சுவாமி மற்றும் அம்பாள் தனித்தேர்களில் எழுந்தருளி, திருத்தேரோட்டத்துடன் வெகு விமரிசையாக நடைபெறும்.காமிக ஆகமத்தின் படி இத்திருக்கோயிலில் 2கால பூஜை நடைடிபறுகிறது.