அருள்மிகு அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட அருள்மிகு வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயிலின் உபக்கோயிலாகும். இத்திருக்கோயில் முழுவதும் கருவறை அர்த்தமண்டபம், மகாமண்டபம், அம்மன் சன்னதி, மகாதுவார நுழைவாயில், நாந்தி மண்டபம், கருங்கற்களால் செய்யப்பட்டுள்ளது. மேலும் செங்கற்களால் ஆன பிரகார சுவார் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலானது செய்யாற்றங்கரையின் தென்புறம் அழுகுற அமையப்பெற்றுள்ளது. மேலும் இத்திருக்கோயிலானது 1000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த திருக்கோயிலாகும். இத்திருத்தலம் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் அமையப்பெற்றுள்ளது.