அருள்மிகு வெண்ணங்கொடி முனியப்பசுவாமி திருக்கோயில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே தோற்றுவிக்கப்பட்டு அதுமுதல் பக்தர்கள் வணங்கி பல அறிய அருள்களை பெற்று வருகின்றனர். இத்திருக்கோயிலில் தினமும் மூன்று கால பூஜை நடைபெற்று வருகிறது. காலசந்தி, உச்சிகால பூஜை, இரவு அர்த்த ஜாம பூஜை மற்றும் பகல் இரஹவ முழுவதும் தொடர்ந்து பக்தர்களுக்காக அருள்பாலித்து வருகின்றார். வாரங்களில் ஞாயிறு, புதன் வெள்ளி தினங்களிலும், அமாவாசை நாட்களிலும் அதிக பக்தர்கள் வந்து பொங்கலிட்டு வழிபாடு செய்கின்றனர்.