அருள்மிகு லட்சுமி நாராயண சுவாமி திருக்கோயில் குமாரபாளையம் இறைவன் அருள்மிகு லட்சுமி நாராயண சுவாமி, ஸ்ரீ காசிவிஸ்வேஸ்வரர் இறைவி ஸ்ரீ விசாலாட்சி தலவிருட்சம் : அத்தி மரம் ஆகமம் : பாஞ்சராத்திரம் தலச்சிறப்பு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகரம் கிராமமாக இருந்து வந்த காலந்தொட்டே இவ்வூரில் முதற்கோவிலாக அமையப்பெற்றது ஸ்ரீ லட்சுமி நாராணயசுவாமி திருக்கோயில், ஸ்ரீ காசிவிஸ்வேஸ்வரர், ஸ்ரீவிசாலாட்சி திருக்கோயிலாகும் எம்பெருமான் ஸ்ரீமத் நாராயணன் மடியில் ஸ்ரீ தேவியாம் இலக்குமி சமேதரராய் அருள்பாலிக்கும் விதத்தில் உள்ளதால் ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி என்ற திருப்பெயர் பெற்றுள்ளது. இம்மூல விக்ரகம் காவேரியாற்றில் இருந்ததாகவும் அதனை எடுத்து பிரதிஷ்டை செய்ததாகவும் முன்னோர் வாயிலாக உணர முடிகிறது. அப்பொழுது கருங்கல்லால் சிறிய கோயிலாக குனிந்து செல்ல கூடிய அளவில் தான் கட்டப்பட்டு இருந்தது. மூலவிக்ரகம் ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி மிகவும்...