மேற்படி திருக்கோயில் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், நாகமரை, நெருப்பூர் கிராமத்தில் வனப்பகுதியில் குகையில் அடிப்பகுதியில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலிலுக்கு குழந்தைகள் இல்லாத பக்தர்கள் அதிகமாக வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இக்கோயிலில் உள்ள முக்கிய தெய்வம் விஷ்ணு, திம்மராய ஸ்வாமி வடிவில் வணங்கப்படுகிறார். அவரது சிலை கருப்பு கிரானைட் கற்களால் ஆனது மற்றும் ஆதிசேஷ பாம்பு மீது சாய்ந்த நிலையில் உள்ளது. சிலை தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது