சேலம் மாநகரில் எட்டுபேட்டை மாரியம்மன் திருக்கோவில்களில் ஒன்றாக அம்மாபேட்டை பகுதியில் உள்ள பலபட்டரை மாரியம்மன் கோவில் திகழ்கிறது இங்கு மாரியம்மன் என்ற நாமத்தோடு வேண்டியவருக்கு வேண்டிய வரங்களை அள்ளித் தந்து அனைவரும் காத்து ரட்சித்து அருளாட்சி செய்து கொண்டிருக்கிறாள் சுமார் 500 வருடங்களாக இப்பகுதியில் இவர் தாயாக வீற்றிருக்கிறாள் பல்வேறு நோய்களை தீர்க்கும் தலமாக இக்கோவில் விளங்குகிறது அம்மாபேட்டை பலபட்டறை மாரியம்மன் அழகு சிறந்தவளாக திகழ்கிறார் நோய்களை தீர்க்கும் தீர்த்தம் இத்திருக்கோவிலின் தீர்த்தம் மிகவும் பிரசித்தி பெற்றது அம்மை நோய் கண் நோய் உடல்நலத்திற்கு அம்மனின் தீர்த்தம் சிறந்த அருமருந்தாக திகழ்கிறது திருமணம் சீக்கிரம் நடைபெறும் குழந்தைப்பேறு மற்றும் இன்னும் பல பிரச்சனைகளுக்கு அம்மனிடம் மனம் உருகி பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியம்...