அருள்மிகு சின்னக்கடை மாரியம்மன் கோயிலென வழங்கும் ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி தேவஸ்தானம் ஸ்ரீ அபிராமி அம்பாள் ஸ்துதி கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடு வாராத நட்பும். கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணி இலாத உடலும், சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும், தொலையாத நிதியமும், கோணாத கோலும் ஒரு துன்பமில்லாத வாழ்வும் துய்யநின் பாதத்தில் அன்பும் -உதவிப்பெரிய தொண்டரோடு கூட்டு கண்டாய் அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே ஆதிகடவூரின் வாழ்வே அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாய் நீ அபிராமியே