நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், கபிலர்மலை, அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், பரமத்தி வேலூர் பேருந்து நிலையத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் மலை மீது அமைந்துள்ள குடைவரை கோயிலாகும். கபிலர் என்னும் புலவர் இம்மலையில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.கபிலர் மலை மேல் உள்ள உச்சி பிள்ளையார் மிகவும் சிறப்பு பெற்றதாகும்.இம்மலையை சுற்றி தன்னிச்சையாக வளர்ந்திருக்கும் மரங்கள் எப்போதும் பசுமையாகவே இருக்கும் . இத்திருக்கோயிலில் மூலவர் சுயம்புவாகவும், கற்சிலையிலும் வழிபடுகின்றனர்.குழந்தை வடிவேலன் என்றே அழைக்கப்படுகின்றார்.