ஓசூர் நகருக்கு அருகில் உள்ள பேளகொண்டப்பள்ளி என்னும் கிராமத்தில் உள்ள இத்திருக்கோயில் சுமார் 40 - 50 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இத்திருக்கோயில் கர்நாட்டகா - தமிழ்நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது. இக்கிராமத்து மக்கள் இத்திருக்கோயிலை ஒன்றினைந்து கட்டியுள்ளனர். திருவிழா காலத்தில் அணைவரும் ஒன்றிணைந்து மிகவும் சிறப்புடன் விழாவினை நடத்துவர். இத்திருக்கோயில் கருவரையில் அருள்மிகு பலகை கரக அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். மூல விக்ரகம் கற்சிலையால் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலில் வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதத்தில் கரகம் எடுக்கும் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவில் ஆண்கரகமாக உத்தம கரக அம்மனும், பெண் கரகமாக பலகை கரக அம்மனும் இணைந்து நடுஜாமத்தில் ஊர்வலமாக ஊரைச்சுற்றி வருவார்கள். மாதம் ஒருமுறை...