முதலாம் இராஜராஜன் தகடூர் பகுதி நுளம்பர்கள் வசமாயிருந்தது. அதனை கைப்பற்றி நிகரிலி சோழ மண்டலம் எனப்பெயரிட்டு தனது ஆளுகையின் கீழ் கொண்டு வந்து ஆட்சிபுரிந்துள்ளான் அதே சமயம் இப்பகுதியில் அமைந்த பல திருக்கோயில்களுக்கு நிவந்தங்களை வழங்கிச் சிறப்பித்துள்ளான். இதற்கு சான்றாக அமைவதே இந்தக் கல்வெட்டுக்கள் ஆகும். மேலும் அவன் காலத்தில் ஸ்ரீ மகாதேவர் எனத்திருக்கோயில் அமைத்து சிறப்பித்துள்ளான். எஞ்சிய சிற்பங்காளகவே உடைந்த நிலையில் தட்சிணாமூர்த்தி, ஜேஷ்டாதேவி, நந்தி போன்றவைகள் சான்றாக காணப்படுகின்றன.