இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. திருமலை திருப்பதியில் வெங்கடாசலபதி உள்ளது போன்று நின்ற நிலையில் திருமால் பிரசன்னமாகி அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாளாக காட்சியளிக்கிறார். உட்புறத்தில் அருள்மிகு அலமேலுமங்கைதாயார், ஆண்டாள், ஆள்வார்கள் மற்றும் ஆசாரியர்கள் காட்சியளிக்கிறார்கள். மேலும் வெளிப்பிரகாரத்தில் ஸ்ரீ கருடாழ்வார் பெரிய திருவடி சன்னதி மற்றும் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட ஸ்ரீ சக்கரத்தாழ்வார் மற்றும் சுதர்சன நரசிம்மர் சன்னதி உள்ளது. ஸ்ரீ வேணுகோபால சுவாமி குழல் ஊதும் கோபாலனாகவும் பசுவுடன் மட்டும் காளிங்க நர்த்தன கண்ணனுடன் குழந்தை பேறு அளிக்கும் சந்தான ஆலிலை கண்ணனாக அருள் பாலிக்கின்றார். திருமால் ஆலயத்தில் நவகிரக சன்னதி அமைந்திருப்பது அரிது. பக்தர்களின் நேர்த்தி பரிகாரத்தலமாக நவகிரக சன்னதி உள்ளது. பெருமாளுக்கு அமுது செய்ய...