கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பெரியோர்கள் வாக்கு. அருள்மிகு ஜோதி விநாயகர் திருக்கோயில் சென்னை மாநகரின் முக்கிய பகுதியான அமைந்தகரை செனாய் நகரில் கெஜலட்சுமி காலனி முதல் தெருவில் அமைந்துள்ளது. இத் திருக்கோவிலின் தல விருட்சம் அரச மரம் ஆகும். வருடத்தின் அனைத்து மாதங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.