கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் , வெங்கடேசா காலனியில் அருள்மிகு ஐய்யப்பசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் அமந்துள்ளது,இத்திருக்கோயிலில் அருள்மிகு ஐய்யப்பசுவாமி மூலவராக உள்ளார், அருள்மிகு மஞ்சளம்மன், அருள்மிகு காசி விஸ்வநாதர் சன்னதி அருள்மிகு காசி விசாலாட்சி, அருள்மிகு ராமர், அருள்மிகு துர்கையம்மன், அருள்மிகு அஷ்ட லட்சுமிகள், அருள்மிகு வள்ளி தெய்வானை உடனமர் முருகர், நவகிரஹ சன்னயும் அமைந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். செவ்வாய்,வெள்ளி சனி மற்றும் அம்மாவாசை ,பெளர்ணமி நாட்கள் சிறப்பு பூஜைகளும், பக்தர்கள் வருகையும் இருக்கும். மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு அலங்காரமும் அபிசேகமும் நடைபெறும்