இத்திருக்கோயில் வடக்கு நோக்கி கருவறை, அர்த்தமண்டபம்,மகாமண்டபம் மற்றும் முன்மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.அர்த்த மண்டபத்தின் வலது பகுதியில் உற்சவர் மண்டபமும், இடதுபுறம் அனுக்கை விநாயகரும் அமைந்துள்ளார். மேலும் கருவறையின் மேற்கு பகுதியில் அருள்மிகு காசி விஸ்வநாதர் மற்றும் அருள்மிகு கன்னி மூல கணபதி, அருள்மிகு கல்யாண சுப்பிரமணியர் தனித்தனி சன்னதிகளாக கிழக்கு நோக்கி அமைத்துள்ளது. மேலும் காசி விஸ்வநாதர் சன்னதி சுவற்றை ஒட்டி, அருள்மிகு தட்சனாமுர்த்தி, அருள்மிகு லிங்கோத்பவர், அருள்மிகு பிரம்மா, அருள்மிகு சண்டிகேஸ்வரர் சன்னதிகளும், மேலும் அருள்மிகு விசாலாட்சி அம்பாள்,அருள்மிகு துர்க்கை அம்பாள் , அருள்மிகு கால பைரவர், நவக்கிரகம் தனித்தனி விமானங்களுடன் அமைத்துள்ளது.
| 06:00 AM IST - 01:00 PM IST | |
| 04:00 PM IST - 08:30 PM IST | |
| 01:00 PM IST - 04:00 PM IST | |
| 08:30 PM IST - 06:00 AM IST | |
| தினசரி காலை 06.௦௦ மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 01.௦௦ மணிக்கு நடை சாத்தப்படும் மீண்டும் மாலை 04.௦௦ திறக்கப்பட்டு 08.3௦ மணிக்கு நடை சாத்தப்படும். கிருத்திகை அன்று காலை 06.௦௦ மணி முதல் இரவு 08.3௦ மணி வரை நடை திறந்திருக்கும் | |