கோவை மாவட்டம், கோவை வடக்கு வட்டம், வீரபாண்டி, அருள்மிகு மாரியம்மன் மாகாளியம்மன் விநாயகர் திருக்கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது.வீரபாண்டி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் தலவிளக்கம் தாய்த்தெய்வம் குடும்பத்திற்கு மட்டும் அன்றி, நாட்டிற்கும் நல்லது செய்பவள் தாய்தான் என்கிற சிந்தனை மிகப்பழங்காலம் முதல் விளங்கி வருகிறது. எல்லாச் சமயங்களும் ஏதோ ஒருவகையில் தாய்த் தெய்வத்தை ஏற்றுக் கொண்டுள்ளன.தமிழில் உள்ள அம்மா என்ற சொல்தான் பல மொழிகளில் விரிந்தது என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். மொழியில் உள்ள உமா என்பது அம்மாவின் திரிபுதான் வட என்கிறார்கள்.உலகம் முழுவதும் ஒருகாலத்தில் தாய்வழிச் சமுதாயம் தாள் விளங்கிவந்துள்ளது. அதாவது தாய்தான் குடும்பத் தலைவியாக விளங்கினாள். சொத்துரிமை அவளுக்குத்தான் உரியது: ஆட்சி உரிமையும் அவளுக்குத் தான். மதுரையில் அல்லி அரசாண்டாள் என்பது, அந்தநாட்டில் ஆட்சிவரிமை...