எழில் கொஞ்சும் கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியில் பொதிகை தென்றல் பொள்ளாச்சி மாநகரில் சுமார் 17 செண்ட் நிலப்பரப்பில் மையப்பகுதியில் ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரிவரதராஜப்பெருமானாய் அமர்ந்து அருள்பாலித்து வருகின்றார். இத்திருக்கோயில் கிழக்கு நோக்கி வாயிலும், கிழக்கு நோக்கி கருவறையும் கொண்டு அமைந்தது சிறப்பானதாகும். அதே சமயம் தெற்கு நோக்கிய வாயிலும் அமைந்தது தனிச்சிறப்பாகும். பொருள் ஆட்சியாக இருந்து இன்று பொள்ளாச்சியாக மக்களால் அழைக்கப்படும் இவ்வூர் மையப்பகுதியில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாக வரலாறு மூலம் தெரிகிறது. ஒரு முறை சோழ மன்னனின் யானைகளுக்கு மதம் பிடித்ததும் வயிற்று வலியால் அவதிப்பட்டதையும் நீக்கி அருளியதால் ஸ்ரீ கரிவரதராஜப்பெருமாள் எனப்பெயர் சூட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இத்திருக்கோயிலில் கிழக்கு நோக்கிய வாயிலில்...