அருள்மிகு அரவான் திருக்கோயில் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகில் 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் கிருஷ்ணர் உற்சவராக உள்ளார். திருவிழா காலங்களில் மட்டுமே அரவான் சுவாமியை சோடித்து, அலங்கரித்து, திருவிழா முடிவில் களப்பலி என்ற நிகழ்வில் மேற்படி சுவாமியை ஓடும் நீரில் விடும் வழக்கம் இருந்து வருகிறது. இத்திருக்கோயிலில் ஐப்பசி மாதம் கூத்தாண்டை பண்டிகை என்னும் அரவான் திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெறும்.