இத்திருக்கோயில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், இரணியூரில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் நகரத்தார் ஒன்பது திருக்கோயிலில் ஒன்றாகும். இத்திருக்கோயில் அப்பகுதியில் பெரியகோயில் என்று அழைக்கபபடுகிறது. இத்திருக்கோயில் சிற்பங்கள் நிறைந்த கோயிலாகும். மஹாவிஷ்ணு இரணியனை சம்காரம் செய்த பிறகு பிரம்மகத்தி தோஷத்தினால் அவதிப்பட்டு வந்தார் . இத்திருக்கோயிலில் வந்து சிவபெருமானை வழிபட்ட போது தோஷத்தினை நீக்கி விஷ்ணுவை ஆட்கொண்டு ஏற்று கொண்டதால் இத்திருத்தலத்தில் வீற்றிருக்கும் சிவ பெருமான் அருள்மிகு ஆட்கொண்டநாத ஸ்வாமி என்று அழைக்கப்படுகிறார். எனவே இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டநாத சுவாமியை வழிபட்டால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்