Screen Reader Access     A-AA+
Government of Tamil Nadu
Hindu Religious & Charitable Endowments Department
×
Go-Top
General

திருக்கோயிலும், தமிழும்


ஆழ்வார்களும், நாயன்மார்களும், அருளாளர்களும், துறவிகளும் தாங்கள் சென்ற இடமெல்லாம் இறைவனைப் போற்றிப் பாடி வணங்கியுள்ளனர். அத்தகைய அருளாளர்கள் அருளியதேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாலாயிர திவ்யப்பிரபந்தம் ஆகியவை பக்தியை போற்றி வளர்த்ததோடு, தெய்வத் தமிழ் மொழியும் செழித் தோங்கிட துணையாக அமைந்துள்ளன.


பக்தர்களுக்கு அடிப்படைவசதிகள்



உலோகத் திருமேனிகள் மற்றும் விலையுயர்ந்த பொருள்கள் பாதுகாப்பு


திருக்கோயில்களுக்குச் சொந்தமான உலோகத்திருமேனிகள், ஆபரணங்கள் மற்றும் விலையுயர்ந்த பொருள்களைப் பாதுகாத்திடகளவு எச்சரிக்கைமணி, கோள்சொல் கடிகாரம், தொட்டிப் பூட்டு, இரும்பு வாயிற்கதவுகள், கண்காணிப்பு ஒளிப்படக்கருவிகள் ஆகியன பொருத்துதல், இரவுக் காவலர்கள்நியமனம், திருக்கோயில் பாதுகாப்புப் படையினர் நியமனம் ஆகியன திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருக்கோயில்களுக்குச் சொந்தமான விலைமதிப்பற்ற உலோகத் திருமேனிகளைப் பாதுகாக்கும் பொருட்டு கீழ்கண்ட திருக்கோயில்களில் உலோகத்திருமேனிகள் பாதுகாப்பு மையங்கள் கட்டப்பட்டுள்ளன.


உலோகத்திருமேனிகள் பாதுகாப்பு மையங்கள் விவரம்


  1. அருள்மிகு தியாகராஜசுவாமி கோயில் (உருவச்சிலை மையம்), திருவாரூர்
  2. அருள்மிகு அகிலாண்டேஷ்வரி மற்றும் ஜம்புகீஸ்வரர் கோயில், திருவானைக்காவல், திருச்சி
  3. அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியாமன் கோயில், திருநெல்வேலி
  4. அருள்மிகு சுகவனேஸ்வரர் கோயில், சேலம்
  5. அருள்மிகு முத்துமரியாமன் கோயில், காந்திநகர், வேலூர்
  6. அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயில், திருவண்ணாமலை
  7. அருள்மிகு இகம்பரேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம்
  8. அருள்மிகு படலேஸ்வரர் கோவில், திருப்பதிரிப்பிள்ளூர், கடலூர்
  9. அருள்மிகு நாகேஸ்வர சுவாமி கோயில், கும்பகோணம்
  10. அருள்மிகு பட்டீஸ்வரர் சுவாமி கோயில், பெரூர், கோயம்புத்தூர்
  11. அருள்மிகு பிரகதாம்பாள் கோயில், திருக்கோகரணம், புதுக்கோட்டை
  12. அருள்மிகு சுந்தராஜ பெருமாள் கோயில், சிவகங்கை
  13. அருள்மிகு தியாகராஜசுவாமி கோவில் (கூடுதல் மையம்), திருவாரூர்
  14. அருள்மிகு தியாகராஜ சுவாமி கோவில், திருவொற்றியூர்
  15. அருள்மிகு சுப்ரமணசுவாமி கோயில், திருத்தணி
  16. அருள்மிகு காளியம்மன் கோவில், ஆதியாமன்கோட்டை, தர்மபுரி
  17. அருள்மிகு ஆஞ்சநேயஸ்வாமி கோயில், விழுப்புரம்
  18. அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர்
  19. அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில், திருச்செங்கோடு, திருச்செங்கோடு
  20. அருள்மிகு சோழிஸ்வரர் திருக்கோயில், பெருந்துறை, பெருந்துறை


திருக்கோயில் பாதுகாப்புப்படை


திருக்கோயில்களில் உள்ள உலோகத்திருமேனிகள், பொன், வெள்ளி ஆபரணங்கள், விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் உண்டியல்கள் ஆகியவற்றின் பாதுகாப்புக்காக `திருக்கோயில் பாதுகாப்புப்படை` என்ற ஒரு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இதில் 1000 இரண்டாம் நிலைக்காவலர்கள், 3000 முன்னாள் படைவீரர்கள் ஆகியோரை நியமனம் செய்வதற்கு அரசு அனுமதி அளித்தது. 2005-2006-ஆம் ஆண்டுகளில் 1000 இரண்டாம் நிலைக் காவலர்களும் 2751 முன்னாள் படைவீரர்களும் பாதுகாப்புப்படையில் பணிபுரிந்தனர். கடந்த 2006-2011-ஆம் ஆண்டுகளில் திருக்கோயில் பாதுகாப்பில் போதிய ஆர்வம் செலுத்தாததால் இந்த எண்ணிக்கை 717 இரண்டாம் நிலைக் காவலர்களும் 1806 முன்னாள் படைவீரர்களும் ஆக குறைந்துள்ளது. இந்த பிரிவில் பணியாளர்கள் குறைபாட்டினை ஈடுசெய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தமிழில் வழிபாடு


திருக்கோயில்களில் தமிழில் வழிபாடு செய்வதை நெறிப்படுத்து வதற்கும் ஊக்குவிப்பதற்கும் `போற்றி` (அர்ச்சனை) நூல்கள் பிரசுரிக்கப் பட்டுள்ளன.


அருளாளர்கள் விழா



தலவரலாறு மற்றும் தலபுராணம்


திருக்கோயில்களின் தொன்மை, வரலாறு, கட்டடக்கலை, கல்வெட்டுச் செய்திகள், வழிபாட்டுச் சிறப்புகள் ஆகியவற்றை மக்கள் அறியும் வண்ணம் தலவரலாறு நூல்களும், திருக்கோயிலையும் திருக்கோயில் அமைந்துள்ள ஊரையும் உள்ளடக்கிய தலபுராண நூல்களும் வெளியிடப்படுகின்றன. மேலும் சிறு திருக்கோயில்களுக்கும் அவற்றின் வழிபாட்டுச் சிறப்புகளை அறிந்து கொள்ள ஏதுவாக தகவல் அட்டைகள் அச்சிட்டு வெளியிடப்படுகின்றன. தலவரலாறு மற்றும் தலபுராண நூல்கள் தேவையடிப்படையில் பதிப்பு செய்தும், புதுப்பித்தும் வெளியிடப்படுகின்றன.


பயணியர் மாவட்ட கையேடுகள்


பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள திருக்கோயில்கள் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள ஏதுவாக, முக்கியமானநகரங்களில் உள்ள திருக்கோயில்கள் மற்றும் அதன் சுற்றுப்புறத்திலுள்ளதிருக்கோயில்கள்தொடர்பானவிவரங்களைச்சேகரித்துஅனைத்து மாவட்டங்களுக்கான பயணியர் வழிகாட்டிக் கையேடுகள் தேவைக்கேற்ப பிரசுரிக்கப்படுகின்றன. பக்தர்கள்மற்றும்சுற்றுலாப்பயணிகள் வசதிக்காக ஏற்கனவே உள்ள பயணியர் கையேடுகள் மீண்டும் பிரசுரிக்கவும் புதிய பயணியர் கையேடுகள் பிரசுரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


ஆகம நூல்களையும், இதரநூல்களையும் தமிழில்வெளியிடுதல்


ஆகம சாத்திர நூல்களும், சிற்பசாத்திர நூல்களும் தமிழர்கள் அறிந்து கொள்ளும் வகையில் தமிழில் வெளியிடப்பட்டுள்ளன. அந்தவகையில் உத்ரகாமிக ஆகமம் மற்றும் குமாரதந்திரம் ஆகிய நூல்கள் தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. மேலும் `இந்து மத இணைப்பு விளக்கம்`, `சைவமும் வைணவமும்`, `ஆலய நிர்மாணபிம்பலட்சண சிற்பநூல்` போன்ற தமிழ் நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன. மேற்கண்டநூல்கள் மறு பதிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


சிறப்பு வழிபாடும் பொது விருந்தும்


ஆண்டு தோறும் முக்கிய திருக்கோயில்களில் சுதந்திரத் திருநாள், பேரறிஞர் அண்ணா நினைவுநாள் ஆகிய நாட்களில் அனைத்துச் சமுதாய மக்களும் ஏற்றத் தாழ்வின்றி பங்கு பெறும் வகையில், சிறப்பு வழிபாடும் பொது விருந்தும் நடத்தப்படுகின்றன.


கோசாலைகள்


திருக்கோயில்களுக்குக் காணிக்கையாக வரப்பெறும் கால்நடைகளைப் பராமரிக்க ஒருங்கிணைந்த கோசாலைகள் பழநி, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம், இராமேஸ்வரம் ஆகிய நான்கு இடங்களில் உள்ளன. திருக்கோயில்களுக்கு உபயமாக பெறப்படும் உபரி கால்நடைகள் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கும், பூசாரிகளுக்கும் விலையின்றி வழங்கப்படுகிறது.


`திருக்கோயில்` திங்களிதழ்


இந்து சமய அறநிலையத்துறையால் 1958-ஆம் ஆண்டு முதல் `திருக்கோயில்` என்ற பெயரிலேயே திங்களிதழ் வெளியிடப்படுகிறது. தற்போது இந்த மாத இதழ்தலை சிறந்த எழுத்தாளர்களின் கட்டுரைகளுடன், எழில்மிகும் வண்ணங்களுடனும் வெளியிடப்படுகிறது. இவ்விதழுக்கு இணையம் வழியாகவும் சந்தாதாரராகலாம். http://www.thirukoilmagazine.tnhrce.in/payment.html