அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் 48, முல்லா தெரு, சென்னை-79. பச்சைமாமலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே என்று தொண்டரடிப் பொடியாழ்வாராலும் அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினை காணாவே என்று திருப்பாணாழ்வாரும் அரங்கனையே தங்கள் பாட்டுடைத் தலைவனாக வணங்கி வாழ்ந்தார்கள். இதனால் தான் தொண்டரடிப்பொடியாழ்வார்பத்தினி ஆழ்வார் என்று போற்றப்பட்ட பெருமை வாய்ந்தவர். அரங்கனை தவிர வேறு எந்த பெருமானும் அவருக்குத் தெரியாது. இப்படிப்பட்ட அரங்கனுக்கு சென்னையில் சௌகார் பேட்டை- 48, முல்லா தெருவில் ஒரு திருக்கோயில் அமைந்துள்ளது. சுமார் 200 வருடங்களுக்கும் மேலான தொன்மை வாய்ந்த இத்திருக்கோயிலில் திருவரங்கத்தைப் போல் பள்ளி கொண்ட ரங்கநாதர் காட்சியளிக்கிறார். திருவரங்கம் அரங்கனுக்கும் இவருக்கும் பெயரில்...